இந்துமுன்னணி பிரமுகர்,எஸ்.ஐ.ஆகியோர் மீது தாக்குதல்.-திமுக கவுன்சிலர் மீது கொலைமுயற்சி வழக்கு. 

by Editor / 26-09-2023 09:16:20am
இந்துமுன்னணி பிரமுகர்,எஸ்.ஐ.ஆகியோர் மீது தாக்குதல்.-திமுக கவுன்சிலர் மீது கொலைமுயற்சி வழக்கு. 

நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகிக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக மோதல் ஆயுதம் கொண்டு இந்து முன்னணி நிர்வாகியை தாக்கியதாக நெல்லை மாநகராட்சி 20 வது வார்டு திமுக கவுன்சிலர் ஷேக் மன்சூர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.மோதல் சம்பவத்தை தடுக்க சென்ற பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்லத்துரையையும் திமுக கவுன்சிலர் தாக்கியதால் .காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக ஷேக் மன்சூர் மீது மூன்று பிரிவின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு.படுகாயம் அடைந்த இந்து முன்னணி நிர்வாகி ஐயப்பன் காவல் உதவி ஆய்வாளர் செல்லதுரை ஆகிய இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : திமுக கவுன்சிலர் மீது கொலைமுயற்சி வழக்கு. 

Share via
Logo