மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் கைது

by Staff / 31-03-2024 12:20:20pm
மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் கைது

சேலம் தைலானூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி பெரியம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பெரியம்மாள் சேலம் டவுன் பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்ததோடு, தனியாக வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்ற ரவிச்சந்திரன், மனைவியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.ஆனால் அவர் செல்ல மறுத்து விட்டார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் மதுபோதையில் அங்கு சென்ற ரவிச்சந்திரன் மனைவியை அடித்து கீழே தள்ளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த தகவலை அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தெரிவிக்கவே போலீசார் வந்து அவர் மேல் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

 

Tags :

Share via