காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த (காவல்) காதல் ஜோடி..

by Editor / 21-05-2023 09:28:37am
காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த (காவல்) காதல் ஜோடி..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்தவர் கமுதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் குத்தாலிங்கம் என்பவரும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி பகுதியைச் சார்ந்த நாகர்கோவில் பட்டாலியனில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் வடிவம்மாள் என்பவரும் காதலித்து வந்த நிலையில் இரண்டு நபர்களும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு நபர்களும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை ஏதும் ஏற்பட்ட விடக்கூடாது என்பதற்காகவும் இரண்டு உதவி ஆய்வாளர்களும் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் காளீஸ்வரி தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கரிடம் அழைத்துச் சென்று அவரது கவனத்திற்கு இந்த சம்பவம் கொண்டு சென்றனர். இருவரையும் அழைத்துப் பேசி அனுப்பி வைத்தார்

 

Tags : உதவி ஆய்வாளர்கள் காதல் திருமணம்.

Share via