நடிகர்கிரிஷா கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக இன்று விசாரணை

by Staff / 08-04-2022 12:18:48pm
நடிகர்கிரிஷா கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக இன்று விசாரணை

ஆஸ்கர் விருது விழாவில் நகைச்சுவை நடிகரை கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக நடிகர் வில் ஸ்மித் மீது இன்று விசாரணை நடத்த உள்ளதாக ஆஸ்கர் அகாடமி அமைப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்கர் அமைப்பின் விருது விழாக்களில் கலந்து கொள்ள நடிகர் வில் ஸ்மித் தடை செய்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை ஆலோசிக்க உள்ளதாக அமைப்பின் தலைவர் டேவிட் ரோபின் தெரிவித்துள்ளார். அடுத்த விசாரணை கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இன்று அமைப்பு விசாரிக்கிறது தனது மனைவி குறித்து கருத்து தெரிவித்த நகைச்சுவை நடிகரை கன்னத்தில் அரைந்த விவகாரத்தில் ஆஸ்கர் அமைப்பில்  வகித்த உறுப்பினர் பதவியை நடிகர் வில் ஸ்மித் கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

 

Tags :

Share via