வாலிபர் தீக்குளித்து தற்கொலை.

by Staff / 31-08-2023 02:13:06pm
வாலிபர் தீக்குளித்து தற்கொலை.

மதுரை அருகே பரவை மெயின் ரோட்டில் வசிக்கும் சோணை முத்துவின் மகன் முரளிதரன் (28) என்பவர் பிஎஸ்சி படித்துள்ளார். இவர் பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதியும் வெற்றி பெற முடியவில்லை. இதனால் மனம் விரக்தியில் இருந்தவர் வீட்டில் நேற்று முன்தினம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via