ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த தறித் தொழிலாளி

by Staff / 28-12-2022 04:49:58pm
ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த தறித் தொழிலாளி

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 25). தறித் தொழிலாளியான இவர், கடந்த 25-ந் தேதி அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ஈரோடு ெரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வந்தனர். மதுபோதையில் தண்டவாளத்தில் நடந்து வந்தபோது, கவுரிசங்கர் ரயில் மோதி உயிரிழந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். போராட்டம் இந்நிலையில், கவுரி சங்கரின் பெற்றோர் நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள் திடீரென உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கூறுகையில், எங்களுக்கும், உறவினர்களுக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. இதன் காரணமாக கவுரி சங்கரை உறவினர்கள் சேர்ந்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசியுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கவுரி சங்கரின் பெற்றோரிடம் சேலம் அரசு மருத்துவமனை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர், மாலையில் பிரேத பரிசோதனை செய்து உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via