ஆளுநரை தொடுவதும், பிரதமர் மோடியை தொடுவதும் ஒன்னு தான்-ஹெச்.ராஜா எச்சரிக்கை. 

by Editor / 24-01-2023 08:49:40am
ஆளுநரை தொடுவதும், பிரதமர் மோடியை தொடுவதும் ஒன்னு தான்-ஹெச்.ராஜா எச்சரிக்கை. 

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே சாத்தனூரில் இளையான்குடி தெற்கு ஒன்றிய பா.ஜ. சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவைத் துவக்கி வைத்த பின் பா.ஜ.க,மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது, தி.மு.க.,ஆட்சி எல்லா துறைகளிலும் தோற்றுப் போன ஒரு ஆட்சி..ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.,விற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். தி.மு.க.,மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என தெரிவித்தார்.

மேலும், கமலாலயத்தில் அதிமுக ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தங்களின் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.ஓரிரு நாட்களில் அதிமுக பாஜக நிலைப்பாடு குறித்து மாநில தலைவர் முடிவை அறிவிப்பார். அதிமுக பிரச்சனை நீதி மன்றத்தில் உள்ளது.அதற்கு நான் கருத்துச் சொல்ல முடியாது. அவர்களைப் பற்றிப் பேச திமுகவிற்கு என்ன அருகதை இருக்கிறது ஹெச்.ராஜா தெரிவித்தார்.

முன்னதாக தொண்டர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, தற்போதைய திமுக அரசாங்கம் நடுங்கிப் போய் உள்ளது. காரைக்குடியில் நடைபெற்ற ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மேடையில் அமர்ந்திருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் வாயைத் திறந்தாரா. இரண்டு மந்திரிகள் அமர்ந்திருந்தார்கள். ஆளுநர் ரவியை தொடுறதும்,பிரதமர் மோடியை தொடரதும் ஒன்று தான். ஹி இஸ் அவர் ரெப்ரசென்டேட்டிவ், இனிமேல் ஆளுநரைப் பற்றிப் பேசக்கூடாது, பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்தார்.
 

 

Tags :

Share via