முதல் நாள் சிறையில் உணவை தவிர்த்த சித்து

by Staff / 21-05-2022 01:07:36pm
முதல் நாள் சிறையில்  உணவை தவிர்த்த சித்து

 பட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இரவு உணவை தவிர்த்து மருந்துகளை மட்டும் எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாது என்றும் மற்ற கைதிகளைப் போலஅவரும் வேலை செய்ததாக வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினக்கூலியாக அவருக்கு 40 முதல் 60  ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சித்துவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட அகாலி தளம் கட்சியின் பைகிராம் சிங்  இதை சிறையில் அடைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via