ஓமன் நாட்டில் பலியான தூத்துக்குடி மாலுமி குடும்பத்திற்கு அமைச்சர் ஸ்ரீநாத் ஆறுதல்
ஓமன் நாட்டில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிசாந்தின் குடும்பத்தினரை மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், நிசாந்தின் உடலை ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு உதவிகள் கிடைக்கச் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















