மாடி படியில் மயங்கி விழுந்த செவிலியர் பலி

by Staff / 07-10-2023 03:15:31pm
மாடி படியில் மயங்கி விழுந்த செவிலியர் பலி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு பாலசுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவர் நாமக்கல் அருகே நல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகுதிநேர செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே ப்ரீத்திக்கு ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நேற்று அதிகாலை ப்ரீத்தி மாடி படிக்கட்டில் மயக்கம் ஏற்பட்டு நிலை தடுமாறி மாடிப்படியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் ப்ரீத்திக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

Tags :

Share via