இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் -அமைச்சர் கீதா ஜீவன்

by Admin / 03-03-2024 10:25:35am
 இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்  -அமைச்சர் கீதா ஜீவன்

கோவில்பட்டி சர்க்கஸ் மைதானத்தில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பட்ஜெட் மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசுகையில் ,நேற்று பெய்த மழையில் பெய்த காளான் போல ஒரு சிலர் என்னவென்று தெரியாமல் பேசி வருகின்றனர்.தமிழகம் மற்றும் திமுகவின் வரலாறு தெரியாமல் பேசி வருகின்றனர்.வீடு இல்லாதவர்களை கண்டறிந்து , எட்டு லட்சம் பேர் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்களில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பேருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்டுள்ள கனவு இல்லம் மூலமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.இந்த திட்டம் ஒன்றிய அரசின் திட்டம் என்று அண்ணாமலை கூறுகிறார்..யாரோ பெத்த பிள்ளைக்கு பெயர் வைப்பது உங்கள் பழக்கம்.கருணாநிதியின் கனவு இல்லம் திட்டம் என்பது தமிழக அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது.ஒன்றிய அரசு பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்களை வைத்துள்ளது.வரலாறு திருத்தப்படுகிறது வரலாற்றை மாற்றி அழிக்கப்படுகிறது.மகாத்மா காந்தியை நாம் மகான் என்கிறோம் .ஆனால் அவர்கள் வேறு கதை சொல்கின்றனர்.பொய் சொல்லி ,பிரிவு ஏற்படுத்தி,  நம்மை ஏமாற்ற நினைக்கின்றனர். தமிழக மக்களிடம் உங்கள் (பாஜக) பருப்பு வேகாது‌.இங்குள்ள மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள் எல்லோருக்கும் எல்லாம் தெரியும்.எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல்.ஊட்டச்சத்து உறுதிப்படுத்தல் என்ற திட்டம் என்பது முழுக்க முழுக்க தமிழக அரசு நிதி. அதுவும் ஒன்றிய அரசு நிதி என்று கூறுகிறார். அண்ணாமலைபா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நல்லா வடை சுடுகிறார்.

உங்கள் பொய்களை மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை.நிச்சயமாக இந்த முறை தமிழக மற்றும் புதுவையில் 40க்கு 40 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவோம். இண்டியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.அ.தி.மு.க, பி.ஜே.பி.க்கு அடிமை ஆட்சி நடத்தியது..பிரதமர் மோடிக்கு நல்லா சலாம் போட்டனர். என்ன செய்தாலும் உள்ளேன் ஐயா என்று கூறி தலையாட்டி கொண்டிருந்தனர்.

ஜெயலலிதா இருந்தபோது கொண்டு வர முடியாத ஒன்றிய அரசு திட்டங்கள் அவர் மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டன..இன்றைக்கு அதிமுக பசுந்தோள் போர்த்திய புலி போல ஒன்னும் தெரியாது போல பசப்பு வார்த்தைகளை பேசி வருகின்றனர்..நம்முடைய உரிமைகளை அடகு வைத்து தமிழர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு கையெழுத்து போட்ட கட்சி அதிமுகஅதிமுகவிற்கு சரியான பாடம்கற்றுத் தருவார்கள்..மீண்டும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்பி போட்டியிட தமிழக முதல்வர் வாய்ப்பு தருவார் என்று நம்புகிறோம்.எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கின்றார்.திமுகவை மோடி மட்டுமல்ல உங்க அப்பன் வந்தாலும் அழிக்க முடியாது.மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது திமுக6 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளது ஒன்றிய அரசு எந்த முகத்தை வைத்துக்கொண்டு மோடியும் , அண்ணாமலையும் பேசுகிறார்கள் என்று தெரியவில்லைகல்வி கடன் ,விவசாய கடன், மகளிர்  கடன் ஆகியவற்றை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்யவில்லைதமிழக அரசு கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்துள்ளது.தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக பெரும் ஊழல் செய்துள்ளது.90 சதவீத நிறுவனங்கள் பாஜகவிற்கு தேர்தல் நிதி கொடுத்துள்கொரோனா தடுப்பு ஊசி தயாரித்த ஜூரம் நிறுவனம் மட்டும் 300 கோடி ரூபாய் பாஜகவிற்கு நிதி அளித்துள்ளது.பொதுத்துறை நிறுவனங்கள், ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் விற்பனை செய்யப்படுகிறது.நாட்டையே விற்று திங்கக்கூடிய ஒரு கூட்டம் ஆட்சி நடத்தி வருகிறது.அந்தக் கூட்டம் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது . இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.ஜனநாயகம் வெற்றி பெற இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றார்.

 

 இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்  -அமைச்சர் கீதா ஜீவன்
 

Tags :

Share via