தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை.

by Staff / 01-09-2023 01:32:39pm
தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை.

நாங்குநேரி மூலக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 8. 30 மணி அளவில் முத்துக்குமார் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். இந்த நிலையில் வள்ளியூர்-நாங்குநேரி இடையே ரெயில்வே தண்டவாளத்தில் முத்துக்குமார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via