மீனவர்கள் மீது தாக்குதல்
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் மீண்டும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் மீனவர்கள் கோடிலிங்கம், மணியன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மீனவர்கள் படகில் இருந்த ஜிபிஎஸ், செல்போன் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை கடற்கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். மீனவர்களை ரப்பர் தடி, கத்தியால் தாக்கி, இடுப்பில் கட்டியிருந்த வெள்ளி அருணா கொடியை அறுத்து சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் ஆகியோர் ஆறுதல் வழங்கியுள்ளது.
Tags :