பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி அதிபர் பிரீட் ரிக் மெர்சுடன் சபர்மதி ஆசிரமத்திற்குசென்றாா்.
இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி அதிபர் பிரீட் ரிக் மெர்சுடன் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டு மகாத்மா காந்தியின் சிலைக்கு சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் ஆசிரமத்தில் காந்தி வாழ்ந்த இடமான கிருதய குஞ்ச் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். பிரதமர் மோடி ஆசிரமத்தின் வரலாறு மற்றும் காந்தியின் கொள்கைகள் குறித்தும் ராட்டினத்தில் நூல் நொறுக்கும் முறையையும் அதன் நுட்பங்களையும் விளக்கினார். ஆசிரமத்திற்கு வருகை புரிந்த ஜெர்மன் அதிபர் அங்கிருந்த வருகையாளர் பதிவேட்டில் ஜெர்மன் மொழியில் தனது அபிப்பிராயங்களை எழுதி கையெழுத்திட்டார்.. இதனைத் தொடர்ந்து சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தனர். ஜெர்மன் அதிபர் இந்தியாவிற்கு வரும் முதல் பயணமாகும்.
Tags :



















