அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு காரணமாக இவர் 90 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதி விளக்கம் தெரிவித்துள்ளார். முன்னதாக தேர்தல் காரணமாக அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
Tags :