மதுவிலக்கு காவல் நிலைய 5 சோதனைச் சாவடிகளில் இருந்த  போலீசார் அனைவரும் கூண்டோடு மாற்றம்

by Editor / 28-05-2023 11:28:42pm
மதுவிலக்கு காவல் நிலைய 5 சோதனைச் சாவடிகளில் இருந்த  போலீசார் அனைவரும் கூண்டோடு மாற்றம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டகுப்பம் மதுவிலக்கு காவல் நிலைய 5 சோதனைச் சாவடிகளில் இருந்த  போலீசார் அனைவரும் கூண்டோடு மாற்றம் எஸ்பி அதிரடி.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் கோட்டகுப்பம் மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்து சோதனை சாவடிகள் உள்ளது இந்த சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் தலா ஐந்து போலீசார் என சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் மேற்பட்ட போலீசார்  விஷ சாராயம் மற்றும் அந்நிய மதுபானங்கள் கடத்தலை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மரக்காணம் எச்சியார்குப்பத்தில் விஷ சாராயம் அருந்தி 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் இதை யடுத்து போலீசாருக்கு மது கடத்தலில் தொடர்பு இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தது இதை யடுத்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி சசாங் சாய் திண்டிவனம் மற்றும்கோட்டகுப்பம் மதுவிலக்கு 5 சோதனை சாவடிகளில் இருந்த போலீசாரை கூண்டோடு அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via