கார் ஏற்றி வியாபாரி கொலை: 2பேர் நீதிமன்றத்தில் சரண்

by Staff / 07-11-2023 01:51:50pm
கார் ஏற்றி வியாபாரி கொலை: 2பேர் நீதிமன்றத்தில் சரண்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரத்தை சேர்ந்தவர் ஜெயபாண்டி மகன் வேம்படிதுரை(40). இவர் சேலத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது உறவினர் இறப்பிற்கு சொந்த ஊரான வன்னிமாநகரத்திற்கு வந்துள்ளார். உறவினர் உடல் அடக்கம் முடிந்த பிறகு வன்னிமாநகரம் வள்ளிவிளை ரோட்டோரத்தில் உள்ள தோட்டத்தில் குளித்து விட்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது எதிரே வந்த கார் வேம்படித்துரை பைக் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் வேம்படித்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலூகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 5 பேர் கொண்ட மர்மநபர்கள் வேம்படிதுரை பைக் மீது ஏற்றிய கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வேம்படித்துரை கொலை வழக்கில் சிவலட்சத்தின் உறவினர்கள் சுதாகர், சொர்ணகோபி உள்ளிட்ட 5 பேர் மீது திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்படும் திருச்செந்தூர் வன்னிமாநகரைச் சேர்ந்த  கடற்கரை தங்கம் மக்ன சொர்ணகோபி, சுப்பிரமணியன் மகன் சுதாகர் ஆகிய 2பேரும் இன்று காலை திருநெல்வேலி ஜேஎம் 3 நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

 

Tags :

Share via