ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சித்ராவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகளை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர். சஞ்ச் தீர்த்தி-சித்ரா சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு லாரியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கினர். லாரியை நிறுத்தி சோதனை செய்யும் போது டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது தனிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை சுட்டுக் கொன்றனர்.
Tags :