திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி

by Staff / 14-10-2024 05:30:01pm
திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி

திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி ---- வீடு, நிலங்களை விற்று வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும் தாங்கள் இழந்த பணத்தை எப்படியாவது மீட்டுத் தரக்கோரி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நிலம் விற்பனை புரோக்கராக இருந்து வருகின்ற நிலையில் இவருக்கு பூங்கோதை என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது. கார்த்திகேயனிடம் அவரது நெருங்கிய நண்பர்கள் கதிரவன் மற்றும் ஆறுமுகம் என்பவர்கள் தனக்கு தெரிந்த நண்பர்கள் வாயிலாக நீங்கள் கொடுக்கின்ற பணத்தை இரட்டிப்பாக வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இந்த நிலையில் தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில், தனக்கு தெரிந்த பைணான்சியர் இருப்பதாகவும், அவர் வாயிலாக வாங்கலாம் எனக்கூறி, தன்னிடம் இருந்த நிலம் மற்றும் வீடு வைத்து 
ரூபாய் 89 லட்சம் பெறப்பட்டது.
இதனை தென்காசி மாவட்டம் நன்னகரம் பகுதியைச் சேர்ந்த அசோக் மற்றும் அவரது மனைவி மற்றும் சகோதரர்களிடம் தென்காசியில் வைத்து கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்றவுடன் அவர்கள் திட்டமிட்டபடி காவல்துறையினர் வருவதாக நாடகமாடி எங்களை அப்பகுதியில் இருந்து விரட்டி விட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை தொடர்பு கொண்ட போது பணம் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் இடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சதீஷ் மற்றும் அசோக் என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தங்களிடம் பெற்ற தொகை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களுக்கு சொந்தமாக நிலம் மற்றும் வீடுகளை வாங்கியுள்ளனர். எனவே தாங்கள் தற்போது பணத்தை முழுவதுமாக இழந்து தவித்து வருகின்றோம். மேலும் அந்த பணம் குறித்து காவல்துறையினிடம் புகார் அளித்த நிலையில் தங்களுக்கு கொலை மிரட்டலும் விடுகின்றனர். எனது பெண் குழந்தைகள் கல்லூரி வகுப்பை சேர்வதற்கு கூட பணமில்லாமல் தவித்து வருகின்றேன். இந்த பணம் இல்லையேல் தனக்கு வாழ்வாதாரம் இல்லை எனவே நாங்கள் கொடுத்த பணத்தை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

 

Tags :

Share via