போராட்டத்தை கைவிட்டார் சாக்‌ஷி மாலிக்

by Staff / 05-06-2023 02:43:15pm
போராட்டத்தை கைவிட்டார் சாக்‌ஷி மாலிக்

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திலிருந்து சாக்‌ஷி மாலிக் விலகியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், சாக்‌ஷி மாலிக் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார். போராட்டத்தை கைவிட்டு மீண்டும் தனது ரயில்வே பணியில் இணைந்துள்ளார் சாக்‌ஷி மாலிக். மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வந்தனர். முன்னதாக, தாங்கள் வென்ற பதக்கத்தை கங்கை ஆற்றில் வீசப்போவதாக வீரர், வீராங்கனைகள் அறிவித்து இருந்தனர்.

 

Tags :

Share via