சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

by Staff / 11-08-2024 12:10:34pm
சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, புத்தரிசி பூஜைக்காக இன்று (ஆகஸ்ட் 11) மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. பாலக்காடு, அச்சன்கோவில் பகுதிகளில் இருந்து அறுவடை செய்த நெற்கதிர்களால் சிறப்பு பூஜை நாளை அதிகாலை 5.45 முதல் 6.30 வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஐயப்பனுக்கு படைத்து பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். புத்தரிசி பூஜை முடிந்தபின் நாளை (ஆகஸ்ட் 12) இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
 

 

Tags :

Share via