குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - நடிகை குஷ்பு ட்வீட்.

by Editor / 20-07-2023 11:36:26pm
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - நடிகை குஷ்பு ட்வீட்.

மணிப்பூர் கொடூரம் குறித்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என நடிகை குஷ்பு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். "மணிப்பூரில் பெண்களுக்கு கொடுமை இழைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை வேடிக்கை பார்த்தவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். சில ஆண்கள் எந்த அளவுக்கு மனிதத்தன்மை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது" என்று தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறியுள்ளார். மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via