செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.

by Editor / 21-07-2023 09:05:44am
செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது தொடர்பான செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதை உடனே விசாரிக்க வேண்டும் என்ற வழக்கறிஞரின் வேண்டுகோளை ஏற்று இன்று செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via