கேரளாவில் பழைய இரும்பு பாத்திரத்தில் திறந்தபோது ஸ்டீல் வெடிகுண்டு வெடித்து தந்தை மகன் பலி

by Editor / 07-07-2022 01:47:00pm
கேரளாவில் பழைய இரும்பு பாத்திரத்தில் திறந்தபோது ஸ்டீல் வெடிகுண்டு வெடித்து தந்தை மகன் பலி

கேரளாவில் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்தனர் கண்ணூர் மாவட்டம்  மட்டனுர்  பகுதியில் ஆசாமை  சேர்ந்த ஐந்து பேர்  வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி பழைய இரும்பு பொருட்கள் பழைய பிளாஸ்டிக் டப்பாக்களில் வாங்கி தரம் பிரித்து விற்பனை செய்து வந்தனர். நேற்று மாலை முதலாவது தளத்தில் பைசல் என்பவரும் அவரது மகன் ராகுல் தாங்கள் சேகரித்த பொருட்களில் இருந்த இரும்பு பாத்திரம் ஒன்றில் திறந்துள்ளனர். அப்போது அந்த பாத்திரம் வெடித்து சிதறியதில் இருவரும் உயிரிழந்தனர் மட்டனுர்  ஒரு போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் வெடிகுண்டு என தெரிய வந்ததை அடுத்து இரும்பு பாத்திரம் எங்கிருந்து வந்தது என விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via