தனியார் பள்ளி வேன் மோதியதில் கணவன், மனைவி பலி

by Staff / 12-09-2023 02:38:52pm
தனியார் பள்ளி வேன் மோதியதில் கணவன், மனைவி பலி

பெருந்துறையை அடுத்துள்ள குள்ளம்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (55). அதே பகுதியில் டைலரிங் கடை வைத்து நடத்தி வரும் இவருக்கு நேற்று திருமண நாள் என்பதால் தனது மனைவி பழனியம்மாள்(50) உடன் காலையில் கோயிலுக்கு சென்று விட்டு, பின்னர் கோபியில் நடைபெறும் ஒரு திருமண விழாவுக்கு செல்வதற்காக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் சீனாபுரத்தில் இருந்து திங்களூர் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, இவருக்கு எதிரே வந்த தனியார் பள்ளி வேன் ஒன்று எதிர்பாராத விதமாக இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவன் மனைவி இருவரும் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via