கிணற்றில் மிதந்த வாலிபர் பிணம்

by Staff / 12-09-2023 02:43:17pm
கிணற்றில் மிதந்த வாலிபர் பிணம்

நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்டமலை பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது 25). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 9-ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அவர்கள் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் உடலுடன் கல்லைக்கட்டி வைத்திருந்ததால் தானாக கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்தாரா? அல்லது யாரேனும் கல்லைக்கட்டி கிணற்றில் தூக்கி எறிந்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்து போன ராமனுக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.

 

Tags :

Share via