கரூரில் அழிக்கப்பட்ட 8, 000 மது பாட்டில்கள்

by Staff / 12-08-2023 03:48:31pm
கரூரில் அழிக்கப்பட்ட 8, 000 மது பாட்டில்கள்

திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்படும் உயர்தர வெளிநாடு மது பாட்டில்களை சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட இறக்குமதி மது பாட்டில்களை திருச்சி சுங்கத்துறையினால் லாரி மூலம் கரூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு கரூர் அரசு காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் இரண்டு பொக்லின் இயந்திரங்கள் உதவியுடன் 6 அடி குழி தோண்டப்பட்டு அதில் 810 அட்டைப்பெட்டியில் மொத்தம் 8, 000 மது பாட்டில்களும் அழிக்கப்பட்டது.இந்நிகழ்வின் போது திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நகர் நல அலுவலர் இலட்சியவர்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.இதனை சுங்கத்துறை அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via