இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையேயான ஆட்டம் நாளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

by Admin / 10-09-2023 09:07:43pm
 இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையேயான ஆட்டம் நாளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கொழும்பில் இன்று இந்தியா பாகிஸ்தானுக்கு இடையான ஆசிய கோப்பை இரண்டாவது கிரிக்கெட் போட்டி தொடங்கியது. களத்தில் இறங்கிய இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் ,மழையின் காரணமாக போட்டி தொடராமல் மழை நின்ற பிறகு போட்டி தொடரும் என்கிற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.8.00மணிக்கு ஆட்ட களநிலவரப்படி போட்டியின் நிலை அறிவிக்கப்படும்.என்ற நிலைப்பாட்டில் மழை தொடர்ந்து பெய்துகொண்டிருப்பதால் ஆட்டம் இன்று கைவிடப்பட்டது .இந்த நிலையிலிருந்து ஆட்டம் நாளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 

 

Tags :

Share via
Logo