கர்நாடகா, மஹாராஷ்டிராவில் என்ஐஏ சோதனை
கர்நாடகா, மகாராஷ்டிராவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று (சனிக்கிழமை) அதிகாலையிலேயே அதிரடி சோதனை மேற்கொண்டனர். 44 இடங்களில் நடந்த இந்தச் சோதனையில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் கோட்பாடுகளை இந்தியாவில் பரப்ப முயற்சித்துள்ளனர் என்று என்ஐஏ குற்றஞ்சாட்டுகிறது. மேலும் அவர்கள் ஐஇடி வெடிப்பொருட்களை தயாரிப்பதிலும் ஈடுபட்டதாகத் தெரிகிறது. தேசத்தில் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபடவிருந்ததால் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :