பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலடா சில்வா பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்
புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத்தில் இல்லத்தில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலடா சில்வா பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்து ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நியமிக்கப்பட்டதாகவும் அரிய மண் தாதுக்கள், மினரல்ஸ், ஸ்டீல், மைனிங், டிஜிட்டல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் மொத்தம் ஒன்பது முதல் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. சீனாவின் மீதான சார்பை குறைக்கும் வகையில் அரிய வகை தாதுக்கள் மற்றும் கிரிட்டிக்கல் மெனரல்ஸ் விநியோக சங்கிலி வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. வளர்ந்து வரும் நாடுகளின் குரலாக செயல்படவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இரு தலைவர்களும் உறுதி கொண்டுள்ளனர் .பிரேசில் அதிபர் பிப்ரவரி 18 முதல் 22 வரை இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :


















