500 டாஸ்மாக் கடை மூடல்; அரசு முடிவில் தலையிட முடியாது

by Staff / 02-12-2023 12:58:06pm
500 டாஸ்மாக் கடை மூடல்; அரசு முடிவில் தலையிட முடியாது

500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடைகளை திறக்க உத்தரவிடக் கோரி கட்டட உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொது நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அரசு எடுத்த கொள்கை முடிவை எதிர்த்து நில உரிமையாளர்கள் வழக்கு தொடர முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஜுன் மாதம் பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

 

Tags :

Share via