இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் உணவுப் பொருள்கள் மருந்துகள் எரிவாயு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது நாட்டின் பல்வேறு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் அவசர உதவி எண் 1990 அழைப்பதை தவிர்க்குமாறு அங்குள்ள ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் ரத்தினபுரி வவுனியா முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் ஆம்புலன்ஸ் சேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :