சிவகாசி பட்டாசு  ஆலையில் விபத்து: ஒருவர் சாவு 

by Editor / 31-07-2021 12:11:06pm
சிவகாசி பட்டாசு  ஆலையில் விபத்து: ஒருவர் சாவு 

 

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஜமீன் சல்வார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர்  உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.


வெடி விபத்தில் சிக்கியவர் உடல் தூக்கி வீசப்பட்டு மரத்தில் மாட்டிக்கொண்டது. மரத்தின் மேல் தொங்கிய உடலை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo