கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு

by Staff / 05-08-2024 03:20:40pm
கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமூர்த்தி பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்துள்ளனர்.

 

Tags :

Share via