ஹிஜாப் அணிய கர்நாடக அரசு அனுமதி
கர்நாடகாவில் ஹிஜாப் அணிய கடந்த பாஜக அரசு தடை விதித்திருந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில், சமீபத்தில் அம்மாநில காங்கிரஸ் அரசு போட்டித் தேர்வுகளின் போது மாணவர்கள் ஹிஜாப் அணிய அனுமதித்துள்ளது. இதற்கான உத்தரவை உயர்கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் வெளியிட்டுள்ளார். ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு வர வேண்டும், அவர்கள் முழுமையாக சோதனை செய்யப்படுவார்கள். நீட் நுழைவுத் தேர்விலும் ஹிஜாப் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Tags :