பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி காலமானார்

அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. தமிழக மக்களின் 90 காலகட்டங்கள் செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி என்ற கம்பீரக் குரலை கேட்காமல் யாருமே இருந்திருக்க மாட்டார்கள். அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான இவர், டெல்லியில் 35 ஆண்டுகள் ஒளிபரப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags :