பூலித்தேவரின் 308வது பிறந்தநாள்.. அரசு மரியாதை
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய மாவீரர், நெற்கட்டான் செவல் மாமன்னர் பூலித்தேவன் அவர்களது 308வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவலில் உள்ள பூலித்தேவரின் நினைவிடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், திமுகவினர் பலர் கலந்துகொண்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :