நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சி வந்தடைந்தார், பிரதமர் மோடி

by Editor / 02-01-2024 10:59:28am
நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சி வந்தடைந்தார், பிரதமர் மோடி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் திருச்சி வருகை தந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா,  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி இன்று (ஜன.2) தமிழ்நாடு வந்தார்.

விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக உயர்கல்வி துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்

இதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து இன்று காலை 10 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.  அவரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர்,  காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் மோடி,  அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.  அந்த விழாவில், 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

 

Tags : நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சி வந்தடைந்தார், பிரதமர் மோடி

Share via