சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள் போக்குவரத்தை சீர் செய்ய கோரிக்கை.

by Editor / 06-09-2024 08:35:18pm
சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள் போக்குவரத்தை சீர் செய்ய கோரிக்கை.

விநாயகர் சதுர்த்தி செப்.07ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடர் விடுமுறையையொட்டி விநாயகர் சதுர்த்தியை சொந்த ஊரில் கொண்டாட பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக சென்னை கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. போக்குவரத்தை சீர் செய்ய காவல்துறையினர் போதிய அளவில் இல்லையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உடனடியாக போக்குவரத்தை சீர் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள் போக்குவரத்தை சீர் செய்ய கோரிக்கை.

Share via