பாலத்தின் தடுப்பு சுவர் மீது அரசு பஸ் மோதி 17 பேர் காயம்

by Staff / 27-11-2023 02:50:07pm
பாலத்தின் தடுப்பு சுவர் மீது அரசு பஸ் மோதி 17 பேர் காயம்

செஞ்சி அருகே பாலத்தின் தடுப்பு சுவர் மீது அரசு பஸ் மோதியதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ் நேற்று காலை 10: 00 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சை அரக்கோணத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், 41; ஓட்டினார். பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். செஞ்சி அடுத்த களையூர் கூட்ரோடு அருகே வந்த போது பைக் ஓட்டி வந்தவர் குறுக்கே வந்ததால் அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் பக்கவாட்டில் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதில் டிரைவர் சதீஷ்குமார், தாம்பரம் சிற்றரசு, 63; பரங்கிமலை மஞ்சுளா, 30; கூடுவாஞ்சேரி கார்த்திக், 33; செஞ்சி லோகநாதன், 54; மேல்காரணை சிவசங்கர், 32; உட்பட 17 பேர் காயமடைந்தனர். உடன் அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via