"சாதியை புறக்கணித்து ஒரு அரசு அமைந்துள்ளது".. உயர் நீதிமன்றம் கருத்து
சமீபத்திய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மக்களை சாதிய சமூகத்தைப் பொருட்படுத்தாமல் வாக்களிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்து இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், சமூகத்தில் சாதி சார்ந்த பாகுபாடுகளை ஒழிக்கத் தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்பதை வலியுறுத்தியுள்ள உயர்நீதிமன்றம், மக்களின் மனதிலிருந்து சாதி ஒழிக்கப்படும்போது மட்டுமே தமிழ்நாடு "உண்மையான மாற்றத்தை" அடைந்துள்ளதாகக் கூற முடியும் எனபதையும் குறிப்பிட்டுள்ளது.
Tags :


















