தெலங்கானா மாநில அரசை விமர்சித்த பிரதமர்

by Staff / 08-04-2023 02:37:51pm
தெலங்கானா மாநில அரசை விமர்சித்த பிரதமர்

தெலங்கானா மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, செகந்திராபாத்திலிருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார். பின்னர் பரேட் மைதான பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், மத்திய அரசுடன் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை, அதனால்தான் தெலுங்கானாவில் வளர்ச்சிப் பணிகள் தாமதமாகி வருகின்றன என்றார். மேலும், பீபிநகர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், தெலங்கானா மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்குமாறு மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.

 

Tags :

Share via