பெண்ணின் முடியை பிடித்து இழுத்த போலீசார்

by Staff / 08-04-2023 02:36:10pm
பெண்ணின் முடியை பிடித்து இழுத்த போலீசார்

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஜபல்பூர் நகரில் மதுக்கடைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதியுள்ளனர். இதில், பெண் ஒருவரை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று அடித்தும், திட்டியும் உள்ளனர். மீதமுள்ள போராட்டக்காரர்களும் இதே போல் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர் . இது குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via