பெண்ணின் உடலை தோண்டி பலாத்காரம் செய்த கொடூரம்

by Staff / 20-04-2023 01:41:17pm
பெண்ணின் உடலை தோண்டி பலாத்காரம் செய்த கொடூரம்

ராஜஸ்தானில் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் பேரதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள, சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்கரைச் சேர்ந்த பெண் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை இறுதிச் சடங்குகளைச் செய்தனர். ஆனால் அன்றிரவே கிராமத்தைச் சேர்ந்த சிலர் மாந்திரீக வழிபாடு என்ற பெயரில் புதைக்கப்பட்ட சடலத்தை வெளியே தோண்டு எடுத்துச் சென்றனர். பின்னர் பெண்ணின் உடலை கொடூரமாக பலாத்காரம் செய்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கொடூர குற்றவாளிகளை பிடித்து, சித்தப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via