கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி-தமிழக கேரளா எல்லைகளில் தீவிர சோதனை.

by Editor / 29-10-2023 09:52:40pm
கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி-தமிழக கேரளா எல்லைகளில் தீவிர சோதனை.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் மத கூட்ட அரங்கில் இன்று வெடிகுண்டு வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்தார் இச்சம்பவத்தை தொடர்ந்து,தமிழக கேரளா எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.இதன் தொடர்ச்சியாக கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை காவல்துறை சோதனை சாவடியில்  முழுமையான சோதனைக்கு பின்பே தமிழகத்திற்குள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன்( பொறுப்பு) தலைமையில் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தெய்வம் மற்றும் தென்காசி டிஎஸ்பி நாகசங்கர் உள்ளிட்ட போலீஸ் குழுவினர் அங்கு முகாம் மீட்டு தீவிர சோதனைகளை மேற்கொண்டனர் மேலும் இது குறித்து தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராகசங்கர் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவிக்கும் பொழுது கேரளாவில் நடந்த  சம்பவம் தொடர்பாக இங்கே சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

 

Tags : கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி-தமிழக கேரளா எல்லைகளில் தீவிர சோதனை.

Share via