தனியார் பேருந்து பள்ளிவாசல் மதில் சுவரின் மோதி நின்றதால் பரபரப்பு..

by Editor / 19-08-2024 10:25:33am
 தனியார் பேருந்து பள்ளிவாசல் மதில் சுவரின் மோதி நின்றதால் பரபரப்பு..

 நெல்லையிலிருந்து கடையம் சென்ற தனியார் பேருந்து பொட்டல்புதூர் பகுதியில் செல்லும் பொழுது தனது கட்டுப்பாட்டை இழந்ததால் அருகில் இருந்தால் பள்ளிவாசல் மதில் சுவர் மீது மோதியது. அப்போது மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக  உயிர் சேதம் எதுவும் இல்லாமல் விபத்து நடைபெற்றுள்ளது.

  அப்போது அங்கே நின்று கொண்டிருந்த கடையநல்லூர் பகுதியில் சேர்ந்த ராபிகா என்ற பெண் மீது பேருந்து லேசாக இடித்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ராபிகாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 விபத்து ஏற்பட்ட பொழுது பேருந்து இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தப்பிச் சென்றனர் அதன்பின் முருகன் என்ற ஓட்டுநரை அருகில் இருந்தவர்கள் பிடித்துள்ளனர். இதன்பின் கலையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின் பேருந்து ஓட்டுனர் மற்றும் பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர்கள் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்..

 

Tags : தனியார் பேருந்து பள்ளிவாசல் மதில் சுவரின் மோதி நின்றதால் பரபரப்பு..

Share via