பெண் தூக்கிட்டு உயிரிழப்பு
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அடுத்த ஓட்டக்கோயில்பட்டி கிராமத்தில் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகளான நிலையில் இளம்பெண் சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் ஆறு மாத கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :