பெங்களூரு சென்ட் தொழிற்சாலையில் தீவிபத்து - 3 பேர் பலி

by Staff / 19-02-2024 02:44:25pm
பெங்களூரு சென்ட் தொழிற்சாலையில் தீவிபத்து - 3 பேர் பலி

பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள சென்ட் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 3 தொழிலார்கள் உடல் கருகி உயிரிழந்தனர். பெங்களூரு ராமச்சந்திரா குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் சென்ட் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென ஆலையில் இருந்த ரசாயனங்கள் வெடித்து சிதறி தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

 

Tags :

Share via