லஞ்ச பணத்தை கழிவறை கோப்பைக்குள் போட்ட அதிகாரி
மும்பையில் ஒருவர் ஓட்டல் தொடங்கிய நிலையில் அங்கு குழாய் வழி கேஸ் இணைப்புக்கு விண்ணப்பித்தார். இதற்கு தீயணைப்பு படையினரின் தடையில்லா சான்றிதழ் தேவை என்பதால் பிரகால்ட் சிதோலே என்ற அதிகாரியை அணுகினார். அவர் வேலையை முடிக்க ரூ.80 ஆயிரம் லஞ்சம் பெற்றிருக்கிறார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தன் இடத்துக்கு வந்ததை அறிந்த பிரகால்ட் பணத்தை கழிவறை கோப்பைக்குள் போட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.
Tags :