தப்பி ஓடிய குற்றவாளிகள்: கை – கால்கள் முறிவு

by Staff / 20-11-2022 01:52:43pm
தப்பி ஓடிய குற்றவாளிகள்: கை – கால்கள் முறிவு

சில நாட்களுக்கு முன்பு மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனை இளைஞர்கள் சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது கைதான இளைஞர்களில் 4 பேர் தப்பியோடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை விடாமல் காவல்துறையினர் துரத்தி சென்ற நிலையில், 4 பேரும் தவறி விழுந்தனர். இதில் அவர்களுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை மருத்துவனையில் அனுமதித்த காவல்துறையினர் கட்டு போட்டு மீண்டும் அழைத்துச் சென்றனர்.

 

Tags :

Share via